61 பேருக்கு கொரோனா


61 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 April 2021 6:03 PM GMT (Updated: 21 April 2021 6:03 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் காரைக்குடி ,சிவகங்கை, மானாமதுரை, கோட்டையூர், திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் 61 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் வீட்டு தனிமை மற்றும் மருத்துவமனைகளில்  422 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் பூரண குணமடைந்த 69 பேர் நேற்று சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.


Next Story