வீட்டில் 22 கிலோ கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது


வீட்டில் 22 கிலோ கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 April 2021 7:44 PM GMT (Updated: 21 April 2021 7:44 PM GMT)

வீட்டில் 22 கிலோ கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்

வாடிப்பட்டி
சமயநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கையா ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சமயநல்லூர் அருகே டேபேதார் சந்தை பகுதியில் சென்றபோது பஸ் நிறுத்தத்தில் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முத்திருளன்(வயது 26) என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதில் சந்தேகமடைந்த போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது அங்கு அவர் மறைத்து வைத்திருந்த சாக்கு மூடையில் 22 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இது சம்மந்தமாக வழக்குபதிவு செய்து முத்திருளனை கைது செய்தனர். கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story