ரெயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை


ரெயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 25 April 2021 7:08 PM GMT (Updated: 25 April 2021 7:08 PM GMT)

ராஜபாளையத்தில் ெரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

ராஜபாளையம், 
ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் கீழூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாசாமியின் மகன் செல்வ முத்து (வயது 34). இவர் அதே பகுதியில் ரைஸ்மில் நடத்தி வந்தார். இவருடைய மனைவி திலகவதி.  இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு நேற்று காதணி விழா வைத்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மதுகுடித்து விட்டு செல்வமுத்து வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் மற்றும் மனைவி கண்டித்ததாக தெரிகிறது. இதனால் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் நேற்று காலை நல்லமநாயக்கன்பட்டி ரெயில்வே தண்டவாளத்தில் செல்வமுத்து உடல் துண்டான நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் மது குடித்ததை கண்டித்ததால் இரவு கொல்லம் சென்ற ரெயில் முன்பு பாய்ந்து செல்வமுத்து தற்ெகாலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story