ஆண்டிமடம், ஓலையூர், மீன்சுருட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


ஆண்டிமடம், ஓலையூர், மீன்சுருட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 25 April 2021 9:07 PM GMT (Updated: 25 April 2021 9:07 PM GMT)

ஆண்டிமடம், ஓலையூர், மீன்சுருட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கோதண்டராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-
ஆண்டிமடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம்பெறும் ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், பெரியதத்தூர், வரதராஜன்பேட்டை, அகரம், அழகாபுரம், சிலம்பூர், திராவிடநல்லூர், சிலுவைச்சேரி, காட்டாத்தூர், அய்யூர், காங்குழி, கூவத்தூர், குளத்தூர், ராங்கியம், பெரியகருக்கை, நாகம்பந்தல், ஸ்ரீராமன் ஆகிய பகுதிகளிலும் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும். இதேபோல் ஓலையூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம்பெறும் ஓலையூர், விழுதுடையான், பெரியாத்துகுறிச்சி ஆகிய பகுதிகளிலும் மற்றும் பாப்பாகுடி துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம்பெறும், மேலணிக்குழி, பாப்பாகுடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, பிள்ளையார்பாளையம், குலோத்துங்கநல்லூர், தென்னவநல்லூர், வேம்புக்குடி, அழகர்கோவில், சலுப்பை, வெத்தியார்வெட்டு, இருதயபுரம், இளையபெருமாள்நல்லூர், கங்கைகொண்டசோழபுரம், வீரபோகம், காட்டுக்கொல்லை, ஜெ.குறுக்குரோடு, தழுதாழைமேடு, வளவநேரி, வங்குடி, இறவாங்குடி, ஏ.என்.பேட்டை, திருக்களப்பூர், கோவில்வாழ்க்கை, நெட்டலக்குறிச்சி, வீரசோழபுரம் ஆகிய பகுதிகளிலும் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும்வரை மின் வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story