சுகாதார பணிகளின் துணை இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி; கணவர் மீது வழக்கு


சுகாதார பணிகளின் துணை இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி; கணவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 25 April 2021 9:12 PM GMT (Updated: 25 April 2021 9:12 PM GMT)

தாக்கப்பட்டதாக சுகாதார பணிகளின் துணை இயக்குனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியை சேர்ந்த ரமேசின் மனைவி கீதாராணி(வயது 42). டாக்டரான இவர் பெரம்பலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். ரமேஷ்-கீதாராணி தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கீதாராணி நேற்று பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிறப்பு டாக்டராக பணிபுரியும் அவருடைய கணவர் ரமேஷ், அவரை தகாத வார்த்தையில் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததோடு, தாக்கியதாகவும், இதில் அவருக்கு காயமும், உள்காயமும் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் கூறியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாக்டர் ரமேசை தேடி வருகின்றனர். மேலும் டாக்டர் கீதாராணி, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story