பாளையங்கோட்டையில் காதல் திருமணம் செய்த பெண் திடீர் சாவு


பாளையங்கோட்டையில் காதல் திருமணம் செய்த பெண் திடீர் சாவு
x
தினத்தந்தி 26 April 2021 7:01 PM GMT (Updated: 26 April 2021 7:01 PM GMT)

பாளையங்கோட்டையில் காதல் திருமணம் செய்த பெண் திடீரென இறந்தார்.

நெல்லை, ஏப்:
பாளையங்கோட்டையில் காதல் திருமணம் செய்த பெண் திடீரென்று இறந்தார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

காதல் திருமணம்

பாளையங்கோட்டை சங்கர் காலனியைச் சேர்ந்தவர் அரிஹர சுதன். இவருடைய மனைவி நந்தினி (வயது 33). எம்.எஸ்சி. பட்டதாரி. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் 2 பேரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சம்பவத்தன்று நந்தினிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் அனுமதித்தனர். 

உதவி கலெக்டர் விசாரணை

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நந்தினி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நந்தினிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், நெல்லை உதவி கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story