பெரம்பலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலி


பெரம்பலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலி
x
தினத்தந்தி 26 April 2021 8:14 PM GMT (Updated: 26 April 2021 8:14 PM GMT)

பெரம்பலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.

 பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 24 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,508 ஆக உயர்ந்துள்ளது. இதில் 23 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் கொரோனாவிற்கு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மேட்டுத்தெரு டால்பின் நகரை சேர்ந்த பெரியசாமி (வயது 65) நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 100 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 1,000 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 512 பேர் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர்.


Next Story