தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 153 பேருக்கு கொரோனா


தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 153 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 April 2021 2:19 AM GMT (Updated: 27 April 2021 2:21 AM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 153 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 153 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த தொற்று கண்டறியப்பட்டவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை

 1045 பேர்

தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 1008 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 115  பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். சிகிச்சை பெற்றவர்களில் நல்லம்பள்ளி அருகே உள்ள கிராம பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஆண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 153 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் 1045 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்று காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 64 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Next Story