கொரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் பலி


கொரோனாவுக்கு மேலும் ஒரு முதியவர் பலி
x
தினத்தந்தி 27 April 2021 7:49 PM GMT (Updated: 27 April 2021 7:49 PM GMT)

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு முதியவர் பரிதாபமாக இறந்தார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,427 ஆக உயர்ந்துள்ளது. இதில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 5,077 பேர் வீடு திரும்பியுள்ளனர். 298 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 51 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 84 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

Next Story