77 பேருக்கு கொரோனா உறுதி


77 பேருக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 28 April 2021 7:25 PM GMT (Updated: 28 April 2021 7:25 PM GMT)

77 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 77 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் பரவலாக சிவகங்கை, சிங்கம்புணரி, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 563 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 78 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

Next Story