கூலித்தொழிலாளி கைது


கூலித்தொழிலாளி கைது
x
தினத்தந்தி 29 April 2021 3:00 PM GMT (Updated: 29 April 2021 3:00 PM GMT)

மாணவி கடத்தல் வழக்கில் தொடர்புடைய கூலித்தொழிலாளி கைது ெசய்யப்பட்டார்.

குள்ளனம்பட்டி:

வேடசந்தூர் அருகே உள்ள தொட்டணம்பட்டியை சேர்ந்தவர் மதுபாலன் (வயது 19). இவர், திண்டுக்கல் அருகே ஜம்புளியம்பட்டியில் உள்ள தனது உறவினரான கூலித்தொழிலாளி அஜித்குமார் (24) வீட்டில் தங்கியிருந்து கூலி வேலை செய்தார். 

அப்போது 10-ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, திருமண ஆசைவார்த்தை கூறி மதுபாலன் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ், திண்டுக்கல் தாலுகா ே்பாலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாலனை கைது செய்தனர். அந்த மாணவியும் மீட்கப்பட்டார். 

இந்தநிலையில் மாணவியை கடத்துவதற்கு அஜித்குமார், அவருடைய மனைவி சிவரஞ்சனி ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிவரஞ்சனியை கைது செய்தனர்.

 இந்த வழக்கில் தொடர்புடைய அஜித்குமார், கடந்த 3 மாதங்களாக தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் திண்டுக்கல் அருகே எலப்பார்பட்டியில் அஜித்குமார் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அஜித்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Next Story