கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 371 பேருக்கு கொரோனா தொற்று


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 371 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 29 April 2021 4:52 PM GMT (Updated: 29 April 2021 4:52 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 371 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 371 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேகமாக பரவும் கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு மாதமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 371 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 371 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று சிகிச்சையில் குணமடைந்து 268 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 10 ஆயிரத்து 975 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 902 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
5,500 பேர் பாதிப்பு
கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 32 ஆக இருந்தது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 902 ஆக உள்ளது.
அதே போல இந்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 8,500 ஆக இருந்தது. ஒரே மாதத்தில் 5,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 4 ஆக அதிகரித்துள்ளது.

Next Story