106 பேருக்கு கொரோனா தொற்று


106 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 29 April 2021 5:40 PM GMT (Updated: 29 April 2021 5:40 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 64 பேர் குணமடைந்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று தினசரி அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 106 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மட்டும் 85 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இ்ந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் பரவலாக சிவகங்கை, சிங்கம்புணரி, மானாமதுரை, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர், மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 600 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 64 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

Next Story