கல்குவாரியில் குளிக்க சென்ற மாணவன் மூழ்கி சாவு


கல்குவாரியில்  குளிக்க சென்ற மாணவன் மூழ்கி சாவு
x
தினத்தந்தி 29 April 2021 7:46 PM GMT (Updated: 29 April 2021 7:46 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்குவாரியில் குளிக்க சென்ற மாணவன் மூழ்கி இறந்தான்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சீனியாபுரத்தை சேர்ந்தவர் இன்பம் (வயது50). இவருடைய மகன் பிரியன் (14). 9-ம் வகுப்பு படித்து வந்தான்.  இந்தநிலையில் பிரியன் நேற்று அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் சிலருடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பந்தபாறை என்ற பகுதியில் செயல்படாத கல்குவாரி கிடங்கில் தேங்கிய தண்ணீரில் குளிக்க சென்றான். 
குளித்த போது பிரியன் திடீரென தண்ணீரில் மூழ்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள் அலறினார்கள். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 
தீயணைப்பு நிலைய அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிசாமி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் குவாரிக்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு மாணவன் பிரியனை பிணமாக மீட்டனர். பின்னா அவனது உடல் பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story