எருமப்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை


எருமப்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 29 April 2021 7:49 PM GMT (Updated: 29 April 2021 8:07 PM GMT)

எருமப்பட்டி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல்,

எருமப்பட்டி அருகே உள்ள பவித்திரம் புதூர் ஊராட்சி தோட்டமுடையாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் ஆனந்தன் (வயது 40). விவசாயி. இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று தெரிகிறது. 

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவர் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story