மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 29 April 2021 8:20 PM GMT (Updated: 29 April 2021 8:20 PM GMT)

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார் செட்டித்திருக்கோணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி செட்டித்திருக்கோணம் நடுத்தெருவை சேர்ந்த கணேசன் (வயது 40) வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story