கிருமி நாசினி தெளிக்கும் பணி


கிருமி நாசினி தெளிக்கும் பணி
x
தினத்தந்தி 30 April 2021 3:14 PM GMT (Updated: 30 April 2021 3:14 PM GMT)

திண்டுக்கல் மாவட்டம் விருப்பாட்சி ஊராட்சியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா, விருப்பாட்சி பகுதியில் 54 வயது உடைய பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

உடனே தகவலறிந்த விருப்பாட்சி ஊராட்சி தலைவர் மாலதி வெண்ணிலா சந்திரன் தலைமையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் அந்த பகுதிக்கு சென்று தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த பணியை ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அந்தோணியார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

 ஆய்வின்போது ஊராட்சி செயலாளர் பிச்சைமணி உடனிருந்தார்.

Next Story