வீடு, தோட்டத்தில் புகுந்த பாம்புகள் பிடிபட்டன


வீடு, தோட்டத்தில் புகுந்த பாம்புகள் பிடிபட்டன
x
தினத்தந்தி 30 April 2021 6:43 PM GMT (Updated: 30 April 2021 6:43 PM GMT)

வீடு, தோட்டத்தில் புகுந்த பாம்புகள் பிடிபட்டன

உசிலம்பட்டி
வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி திடீர்நகரை சேர்ந்தவர்  தென்னரசு. இவரது வீட்டில் சாரைபாம்பு பதுங்கி இருப்பதாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று 2 மணி நேர போராட்டத்திற்கு பின் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பினை பிடித்தனர். பின்னர் அதை சிறுமலை காட்டுக்குள் சென்று விட்டு விட்டனர்.
இதேபோல் உசிலம்பட்டி அருகே உள்ள வி.பெருமாள்பட்டி கிராமத்தை சேர்ந்தவரின் தோட்டத்தில் பதுங்கி இருந்த பாம்பை, சிவாலயம் திருப்பணிக்குழு நண்பர்கள் அமைப்பினர் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைத்தனர்.

Next Story