காவேரிப்பாக்கம்; அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி சாவு


காவேரிப்பாக்கம்; அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 1 May 2021 4:21 PM GMT (Updated: 1 May 2021 4:21 PM GMT)

காவேரிப்பாக்கத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

காவேரிப்பாக்கம்

காவேரிப்பாக்கம் புண்ணிய முதலி தெருவை சேர்ந்தவர் ராணி (வயது 62). இவர், காது வலிக்கு மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் ராணி அதிகளவு மாத்திரை சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் மயக்கம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----

Next Story