திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி


திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 1 May 2021 5:08 PM GMT (Updated: 1 May 2021 5:08 PM GMT)

திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அன்னவாசல், மே.2-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் அன்னவாசல் பகுதியில் வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் திடீரென்று கருமேகங்கள் திரண்டு பலத்த காற்றுடன் மழை பெய்து. இந்த மழை சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது. இதேபோல் இலுப்பூர், சத்திரம், வீரப்பட்டி, சித்தன்னவாசல், குடுமியான்மலை, முக்கண்ணாமலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி வாரச்சந்தை மழையின் காரணமாக தண்ணீர் தேங்கியதால் வியபாரிகள் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். 

Next Story