புதுக்கோட்டையில் வீடு புகுந்து 8½ பவுன் நகைகள் திருட்டு
புதுக்கோட்டையில் வீடு புகுந்து 8½ பவுன் நகைகளை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை, மே.2-
புதுக்கோட்டை ராமச்சந்திரபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 37). சம்பவத்தன்று இவரது வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து பீரோவில் இருந்த 8½ பவுன் நகைகளை திருடி சென்றனர். மேலும் அவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் திருடிவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து கணேசன் கணேஷ் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை ராமச்சந்திரபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 37). சம்பவத்தன்று இவரது வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து பீரோவில் இருந்த 8½ பவுன் நகைகளை திருடி சென்றனர். மேலும் அவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளையும் திருடிவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து கணேசன் கணேஷ் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story