ஒரே நாளில் 438 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் 438 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 May 2021 5:58 PM GMT (Updated: 1 May 2021 5:58 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 305 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 305 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 
438 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று குறையவில்லை. தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
கடும் நடவடிக்கை
தற்போது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 850-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் நேற்று ஒரே நாளில் 305 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 443-ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா பாதித்த 3 ஆயிரத்து 168 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேலும், 239 பேர் இதுவரை சிகிச்சை பலன் இன்றி கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மீறுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Next Story