வேறு கிராமத்திற்கு குடிநீர் கொண்டு செல்ல கிராம மக்கள் எதிர்ப்பு


வேறு கிராமத்திற்கு குடிநீர் கொண்டு செல்ல கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 1 May 2021 6:00 PM GMT (Updated: 1 May 2021 6:00 PM GMT)

தேவகோட்டை அருகே வேறு கிராமத்துக்கு குடிநீர் கொண்டு செல்ல கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேவகோட்டை,

தேவகோட்டையை அடுத்த சருகணி அருகே உள்ள செங்கற்கோவில் கிராமத்தில் நல்ல நீர் வளம் உள்ளது. .இந்த கிராமத்திலிருந்து மேலும் பல்வேறு கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் மிகவும் ஆழமான அளவில் கிராவல் மண் எடுத்ததால் வறட்சிக்கு இலக்காகி நீரின் அளவு குறைந்து போயுள்ளது.இந்நிலையில் இந்த கிராமத்தில் இருந்து கல்லங்குடி ஊராட்சிக்கு குடிநீர் எடுத்துச் செல்ல ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கியது.இந்நிலையில் அந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு இங்கு இனிமேல் வேறு கிராமங்களுக்கு குடிநீர் எடுத்துச் செல்லக்கூடாது எங்கள் கிராமத்தில் நீர்வளம் கேள்விக்குறியாகிவிடும் என குற்றம்சாட்டி ஆழ்துளை கிணறு அமைப்பதை தடுத்து நிறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அந்த பணியை நிறுத்தி வைத்துள்ளனர்.


Next Story