விஷம் குடித்த தாயும் சாவு


விஷம் குடித்த தாயும் சாவு
x
தினத்தந்தி 1 May 2021 6:09 PM GMT (Updated: 1 May 2021 6:09 PM GMT)

2 குழந்தைகளை கொலை செய்து விட்டு விஷம் குடித்த தாயும் சாவு

பல்லடம்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது 29). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு, பிருந்தா(7), பிரசந்தா(5) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த தமிழ்செல்வி தனது மகள்களுடன் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லட்சுமி மில் பகுதியில் வசிக்கும், தனது தம்பி முருகன் வீட்டில் வந்து தங்கினார். பின்னர் அருகில் உள்ள பனியன் கம்பெனிக்கு டெய்லராக வேலைக்கு சென்று வந்தார். 
இந்த நிலையில் தமிழ்ச்செல்வியுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக பிரபு தெரிவித்தார். இதன்படி சேர்ந்து வாழ பெற்றோர் மற்றும் உறவினர்கள் தமிழ்செல்வியை அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு தமிழ்ச்செல்வி மறுப்பு தெரிவித்தார் இதனால் மனவேதனை அடைந்த தமிழ்ச்செல்வி, தனது குழந்தைகளுக்கு எலி மருந்தை பாலில் கலந்து கொடுத்துவிட்டு தானும் குடித்தார். இதை அறிந்த உறவினர்கள் அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு, சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 குழந்தைகள் இறந்தனர். தமிழ்ச்செல்வி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். குடும்பத் தகராறில், மகள்களை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story