ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று


ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 1 May 2021 8:19 PM GMT (Updated: 1 May 2021 8:19 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 28 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 2 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 7 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 6 பேரும் என மொத்தம் 43 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,672 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 24 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். 2,443 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 205 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 682 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Next Story