குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 1 May 2021 8:41 PM GMT (Updated: 1 May 2021 8:41 PM GMT)

புளியங்குடியில் குண்டர் சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புளியங்குடி, மே:
புளியங்குடி அருகே உள்ள நெல்கட்டும்ெசவல் பகுதியை சேர்ந்த துரைப்பாண்டி மகன் சிங்கதுரை (வயது 22). இவர் மீது புளியங்குடி போலீஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்களை தாக்கியது, மணல் கடத்தலில் ஈடுபட்டது உள்பட 4 வழக்குகள் உள்ளன. எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மாவட்ட கலெக்டர் சமீரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் ஆகியோருக்கு புளியங்குடி துணை சூப்பிரண்டு சுவாமிநாதன் பரிந்துரைத்தார். இதையடுத்து அவர்களது உத்தரவுப்படி புளியங்குடி இன்ஸ்பெக்டர் ராஜாராம், சிங்கதுரையை குண்டர் சட்டத்தில் கைது செய்தார். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story