வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன


வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன
x
தினத்தந்தி 1 May 2021 9:38 PM GMT (Updated: 1 May 2021 9:38 PM GMT)

சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

ஈரோடு
சித்தோடு வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
வாக்கு எண்ணும் மையம்
ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள் ஈரோடு அருகே உள்ள சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அனுமதி
சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியின் நுழைவு வாயிலில் ேசாதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை பணிக்கு வரும் அனைவரும் பரிசோதனைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். உரிய அனுமதிச்சீட்டு, அடையாள அட்டைகள் இருப்பவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மைய வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்கு எண்ணிக்கை முடிவினை கேட்க வரும் அனுமதி பெற்ற கட்சி தொண்டர்கள் நுழைவுவாயிலில் நிறுத்தப்படுவார்கள். அங்கு சமூக இடைவெளியை பின்பற்றும் வகையிலும், நெரிசலை தவிர்க்கும் வகையிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதற்கான பணிகள் நேற்று துரிதமாக நடந்தன.

Next Story