ஈரோட்டில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை


ஈரோட்டில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
x
தினத்தந்தி 1 May 2021 9:40 PM GMT (Updated: 1 May 2021 9:40 PM GMT)

ஈரோட்டில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று காலத்தில் உதவிகள் மேற்கொள்ள ஈரோடு மாவட்ட அளவில் தொழிலாளர் நலத்துறை மூலம் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாலதண்டாயுதத்தை 8610711278 என்ற செல்போன் எண்ணிலும், தொழிலாளர் துணை ஆய்வாளர் முருகேசனை 6380021835 என்ற எண்ணிலும், தொழிலாளர் உதவி ஆய்வாளர் சங்கரனை 9047012425 என்ற எண்ணிலும், அலுவலக தொலைபேசி 04242270090 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை ஈரோடு தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் பாலதண்டாயுதம் தெரிவித்துள்ளார்.

Next Story