நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 258 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 16,241 ஆக உயர்வு


நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 258 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 16,241 ஆக உயர்வு
x
தினத்தந்தி 1 May 2021 11:45 PM GMT (Updated: 1 May 2021 11:45 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 258 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 16,241ஆக உயர்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 258 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 16,241ஆக உயர்ந்துள்ளது.
258 பேருக்கு கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 981 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 983 ஆக அதிகரித்தது.
இதற்கிடையே நேற்று ஒரே நாளில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் உள்பட 258 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,241 ஆக உயர்ந்துள்ளது.
1,835 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 219 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 284 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 122 பேர் இறந்து விட்ட நிலையில், 1,835 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் முககவசம் அணியாமல் வெளியே செல்லக்கூடாது எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Next Story