கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 284 பேருக்கு கொரோனா தொற்று


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 284 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 9 May 2021 5:14 PM GMT (Updated: 9 May 2021 5:14 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 284 பேருக்கு கொரோனா தொற்று

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 13 ஆயிரத்து 668 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 12,786 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 118 பேர் இறந்துள்ளனர். 

இந்த நிலையில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 760 பேரின் உமிழ்நீர்.பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 284 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதை அடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 952-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story