விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி


விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி
x
தினத்தந்தி 9 May 2021 5:31 PM GMT (Updated: 9 May 2021 5:31 PM GMT)

383 பேருக்கு தொற்று உறுதி

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 22,031 பேர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 141 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 19,245 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த 79 வயதுடைய முதியவர், மேல்மலையனூரை சேர்ந்த 71 வயது முதியவர் என 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 141-ல் இருந்து 143 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது.. இதில் ஒரே நாளில் 383 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,424 ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 427 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 19,672 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது 2,611 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story