மின்சாரம் பாய்ந்து மாணவன் சாவு


மின்சாரம் பாய்ந்து மாணவன் சாவு
x
தினத்தந்தி 9 May 2021 7:13 PM GMT (Updated: 9 May 2021 7:13 PM GMT)

செல்போனுக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் பாய்ந்து மாணவன் சாவு

அலங்காநல்லூர்
மதுரை அருகே செல்போனுக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் பாய்ந்து மாணவன் பரிதாபமாக இறந்தான்.
செல்போனுக்கு சார்ஜ்
மதுரை பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டியை சேர்ந்தவர் கண்ணன். விவசாயி. இவரது மகன் கருப்பணகுமார்(வயது 16). இவர் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் செல்போனுக்கு சார்ஜ் ஏற்ற முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதைதொடர்ந்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கருப்பணகுமார் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக அவர் இறந்தார். 
சோகம்
இதுகுறித்து பாலமேடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனுக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் பாய்ந்து மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story