தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 May 2021 9:28 PM GMT (Updated: 9 May 2021 9:28 PM GMT)

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

மணிகண்டம்
திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகன் ராஜா (வயது 35). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜா அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது ராஜா, தனது மனைவியை அடித்ததால் அவர் கோபித்துக்கொண்டு தனது பிள்ளைகளுடன் அவருடைய தாய் வீடு உள்ள விருதுநகருக்கு சென்று விட்டார். இதனால் ராஜா குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் உள்ள அவரது அக்காள் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். அப்போதும் ராஜா பக்கத்து வீட்டுக்காரர்களிடம் அடிக்கடி தகராறு செய்ததால், அதை அவரது அக்காள் கண்டித்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த நிலையில் இருந்த ராஜா நேற்று காலை அவரது அக்காள் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இதுகுறித்து மணிகண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story