தங்கும் விடுதி உரிமையாளர் தற்கொலை
பழனியில் தங்கும் விடுதி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பழனி:
பழனி அடிவாரத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50).
இவருக்கு அடிவாரம் பகுதியில் சொந்தமாக தங்கும் விடுதி உள்ளது.
குடும்ப பிரச்சினை காரணமாக இவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் விடுதியில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த பழனி போலீசார் அங்கு வந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story