கொரோனாவுக்கு வாலிபர் பலி


கொரோனாவுக்கு வாலிபர் பலி
x
தினத்தந்தி 10 May 2021 8:38 PM GMT (Updated: 10 May 2021 8:38 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபர் உயிரிழந்தார். மேலும் 180 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர்:

பலி எண்ணிக்கை உயர்வு
கொரோனாவின் தாக்கம் பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 120 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 17 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 22 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 21 பேரும் என மொத்தம் 180 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 3,518 ஆக உயர்ந்துள்ளது. இதில் 30 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனாவுக்கு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 31 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
708 பேருக்கு சிகிச்சை
மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 2,779 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 708 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 1,046 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Next Story