நீலகிரியில் 179 பேருக்கு கொரோனா


நீலகிரியில் 179 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 May 2021 1:21 AM GMT (Updated: 11 May 2021 1:22 AM GMT)

நீலகிரியில் 179 பேருக்கு கொரோனா.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 933 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 179 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் 162 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 

நீலகிரியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 118 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 10 ஆயிரத்து 181 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் 53 பேர் இறந்தனர். மீதமுள்ள 884 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு தெரிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Next Story