கார் மோதி விவசாயி சாவு


கார் மோதி விவசாயி சாவு
x
தினத்தந்தி 12 May 2021 12:52 PM GMT (Updated: 12 May 2021 12:52 PM GMT)

வேடசந்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயி பலியாகினார்.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வள்ளிபட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 80). விவசாயி. 

கடந்த 6-ந்தேதி இவர், கூம்பூர்-வேடசந்தூர் சாலையில் வெள்ளையம்பட்டி பிரிவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இதில் தூக்கி வீசப்பட்ட சின்னச்சாமி படுகாயம் அடைந்தார்.

 அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி சின்னச்சாமி நேற்று பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த கார் டிரைவர் சரவணன் (46) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story