கூலித்தொழிலாளி தற்கொலை


கூலித்தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 12 May 2021 2:17 PM GMT (Updated: 12 May 2021 2:24 PM GMT)

திண்டுக்கல் அருகே கூலித்தொழிலாளி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள புங்கம்பாடியை சேர்ந்தவர் சின்னையன் (வயது 40). கூலித்தொழிலாளி. 

இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். 

சின்னையன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரத்திலிருந்து கீழே விழுந்து கால் முறிந்து அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். 

இதனால் அவர் மனமுடைந்து  காணப்பட்டார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சின்னையன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவலறிந்த சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவருடை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 


இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story