மாவட்டத்தில் புதிதாக 246 பேருக்கு கொரோனா தொற்று


மாவட்டத்தில் புதிதாக 246 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 12 May 2021 5:40 PM GMT (Updated: 12 May 2021 5:40 PM GMT)

மாவட்டத்தில் புதிதாக 246 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கரூர்
246 பேருக்கு தொற்று
தமிழகத்தில் கொரோனா நோய்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவினால் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். 
இந்தநிலையில் நேற்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி கரூர் மாவட்டத்தில் புதிதாக 246 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 3 பேர் சாவு
ஏற்கனவே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 215 பேர் பூரண குணமடைந்த நிலையில் அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். தற்போது மருத்துவமனையில் 1,482 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story