கோவில்பட்டியில் கொரோனாவுக்கு முதியவர் பலி
கோவில்பட்டியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நேற்று ஒரே நாளில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அரசு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களையும் சேர்த்து இந்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 119 பேர் ஆண்கள், 100 பேர் பெண்கள் ஆவர். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நேற்று 35 பேர் வீடு திரும்பினர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவில்பட்டி இந்திரா நகரை சேர்ந்த 80 வயது முதியவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
Related Tags :
Next Story