டெக்ஸ்டைல் தொழிலாளி மர்ம சாவு


டெக்ஸ்டைல் தொழிலாளி மர்ம சாவு
x
தினத்தந்தி 13 May 2021 5:49 PM GMT (Updated: 13 May 2021 5:49 PM GMT)

டெக்ஸ்டைல் தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.

கரூர்
திருப்பத்தூர் அருகே உள்ள சுந்தரம்பள்ளியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 52). இவர் கரூர் வாங்கல் அருகே உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தங்கியிருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவருடன் பணியாற்றும் சகதொழிலாளர்கள் சண்முகத்தை தேடி பார்த்துள்ளனர். அப்போது மண்மங்கலம் அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் சண்முகம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகம் எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story