சமூக இடைவெளி எங்கே?


சமூக இடைவெளி எங்கே?
x
தினத்தந்தி 13 May 2021 6:17 PM GMT (Updated: 13 May 2021 6:17 PM GMT)

மானாமதுரை வாரச்சந்தையில் பொதுமக்கள் திரண்டதால் சமூக இடைவெளி எங்கே? என்று கேள்விக்குறி எழுந்து உள்ளது.

முககவசம் அணிந்தால் மட்டும் போதாது. சமூக இடைெவளியை கடைபிடித்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும். மானாமதுரை வாரசந்தையில் பொருட்கள் வாங்க திரண்டிருந்த கூட்டம் தான் இது. இப்படி சமூக இடைவெளி இன்றி சந்தையில் திரண்டால் கொரோனா தொற்று அதிகரிக்க தானே செய்யும். பொதுமக்கள் உணர்வார்களா? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுப்பார்களா?


Next Story