மூதாட்டி தற்கொலை


மூதாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 13 May 2021 8:18 PM GMT (Updated: 13 May 2021 8:18 PM GMT)

தாயில்பட்டி அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தாயில்பட்டி, 
தாயில்பட்டி அருகே உள்ள சேதுராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராமுத்தாய் (வயது 73). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வெளியில் சென்று வருவதாக கூறி சென்றார். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பின்புறம் மண்எண்ணெைய உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். ராமுதாயின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் உள்ளவர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராமுதாயின் மகன் ேமடத்துரை அளித்த புகாரின் பேரில் வெம்ப கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story