கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 6 லட்சமாக உயர்வு


கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 6 லட்சமாக உயர்வு
x
தினத்தந்தி 14 May 2021 7:04 PM GMT (Updated: 14 May 2021 7:04 PM GMT)

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 6 லட்சமாக உயர்ந்து உள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 6 லட்சமாக உயர்ந்து உள்ளது. 

நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா பாதித்தோர்

கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 27 ஆயிரத்து 105 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 41 ஆயிரத்து 779 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 30 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 373 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 85 ஆக உயர்ந்துள்ளது. 

ஒரே நாளில் 35 ஆயிரத்து 879 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து 15 லட்சத்து 10 ஆயிரத்து 557 பேர் மீண்டுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 98 ஆயிரத்து 605 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 14 ஆயிரத்து 316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மண்டியாவில் 1,385 பேர்

பாகல்கோட்டையில் 773 பேர், பல்லாரியில் 2 ஆயிரத்து 421 பேர், பெலகாவியில் 1,592 பேர், பெங்களூரு புறநகரில் 707 பேர், பீதரில் 223 பேர், சாம்ராஜ்நகரில் 713 பேர், சிக்பள்ளாப்பூரில் 354 பேர், சிக்கமகளூருவில் 835 பேர், சித்ரதுர்காவில் 314 பேர், தட்சிண கன்னடாவில் 1,215 பேர், தாவணகெரேயில் 581 பேர், தார்வாரில் 829 பேர், கதக்கில் 591 பேர், ஹாசனில் 1,339 பேர், ஹாவேரியில் 292 பேர், கலபுரகியில் 929 பேர், குடகில் 539 பேர், கோலாரில் 306 பேர், கொப்பலில் 495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மண்டியாவில் 1,385 பேர், மைசூருவில் 2 ஆயிரத்து 340 பேர், ராய்ச்சூரில் 1,063 பேர், ராமநகரில் 459 பேர், சிவமொக்காவில் 1,045 பேர், துமகூருவில் 2 ஆயிரத்து 668 பேர், உடுப்பியில் 1,219 பேர், உத்தரகன்னடாவில் 787 பேர், விஜயாப்புராவில் 444 பேர், யாதகிரியில் 683 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

373 பேர் சாவு

கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் 121 பேரும், பல்லாரியில் 26 பேரும், பீதரில் 4 பேரும், சாம்ராஜ்நகரில் 6 பேரும், சிக்பள்ளாப்பூரில் 3 பேரும், சித்ரதுர்காவில் 2 பேரும், தட்சிண கன்னடாவில் 3 பேரும், தார்வாரில் 5 பேரும், கதக்கில் 4 பேரும், ஹாசனில் 20 பேரும், ஹாவேரியில் 9 பேரும், கலபுரகியில் 21 பேரும், குடகில் 8 பேரும், கோலாரில் ஒருவரும், கொப்பலில் 6 பேரும்,

 மண்டியாவில் 13 பேரும், மைசூருவில் 12 பேரும், ராய்ச்சூரில் 3 பேரும், ராமநகரில் 13 பேரும், சிவமொக்காவில் 5 பேரும், துமகூருவில் 19 பேரும், உடுப்பியில் 3 பேரும், உத்தரகன்னடாவில் 15 பேரும், விஜயாப்புராவில் 9 பேரும், யாதகிரியில் 6 பேரும் என இவர்கள் உள்பட மொத்தம் 373 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அச்சம் அடைய...

கர்நாடகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. நேற்று முன்தினம் பாதிப்பு 35 ஆயிரத்து 297 ஆக இருந்த நிலையில் மாநிலத்தில் நேற்று பாதிப்பு சற்று அதிகரித்து 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

 இது மாநில அரசையும், மக்களையும் சற்று அச்சம் அடைய வைத்துள்ளது. 
நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு விகிதம் 27.64 சதவீதமாக இருந்த நிலையில், நேற்று அது 32.86 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Next Story