தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் தி.மு.க., எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு


தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் தி.மு.க., எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 15 May 2021 2:11 AM GMT (Updated: 15 May 2021 2:11 AM GMT)

கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு செய்தார்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு அடிப்படை வசதிகள் முழுமையாக இல்லாத நிலையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியை எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட சுகாதார பணிகளுக்கான இணை இயக்குனர் ராணி, தாசில்தார் மகேஷ், வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த ஆய்வின் போது கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன், தனியார் மின் உற்பத்தி தொழிற்சாலை வழங்கிய 8 ஆக்சிஜன் செறிவூட்டும் எந்திரங்களை மாவட்ட சுகாதார பணிகளுக்கான இணை இயக்குனர் ராணியிடம் ஒப்படைத்தார்.

மேலும் எளாவூரில் உள்ள தனியார் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் இயங்கிவரும் கொரோனா சிகிச்சை மையத்தையும் அவர்கள் ஆய்வு செய்தனர். இதனையடுத்து எளாவூரில் பயன்பாடின்றி கிடக்கும் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி கட்டிடங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

Next Story