4 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்


4 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 May 2021 6:06 PM GMT (Updated: 15 May 2021 6:06 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை திருப்பத்தூரில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை திருப்பத்தூரில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

கொரோனா நிவாரண நிதி

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் நகர் மற்றும் அரளிக்கோட்டை ஊராட்சியில் உள்ள ரேஷன்கடைகளில் நேற்று  குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் முதல்தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பயனாளிகளுக்கான ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

4 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள்

தி.மு.க.ஆட்சிக்கு வந்தவுடன் ஜூன் மாதம் 3-ந்தேதி கருணாநிதி பிறந்த நாள் அன்று கொரோனா நிவாரண தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தேர்தலின் போது மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தற்போது ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற அன்றைய தினமே தலைைம செயலகத்தில் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன முத்தான 5 வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றினார்.
அதில் ஒன்று கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்குதல். இத்திட்டம் ஜூன் மாதம் தான் ெதாடங்குவதாக தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது இரண்டாம் கட்ட அலையில் பொதுமக்கள் அதிகளவு பாதிப்பிற்கு உள்ளாகி வருவதை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவிட்டு நிதியை ஒதுக்கி உள்ளார்.
 தமிழகத்தில் ரூ.4,153.49 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி, இதன்மூலம் 2,07,66,950 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகிறார்கள். சிவகங்கை மாவட்டத்தில் 829 ரேஷன்கடைகளில் 4,02,854 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.80.57 கோடி ஓதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சண்முகவடிவேல், முன்னாள் ஒன்றிய தலைவர் பெருமாள், திருப்பத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில் குமார், ஒன்றிய துணைச்செயலாளர் எம்.ஆர்.சி.இளங்கோவன், உசாலிசுரேஷ், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பள்ளத்தூர் ரவி, கே.எஸ்.நாராயணன், ஒன்றிய செயலாளர்கள் விராமதி மாணிக்கம், பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் மாணிக்கவாசன், மற்றும் அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story