பேரளம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 5 மோட்டார்சைக்கிள்கள்-2 மாட்டுவண்டிகள் பறிமுதல்


பேரளம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 5 மோட்டார்சைக்கிள்கள்-2 மாட்டுவண்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 May 2021 10:07 AM GMT (Updated: 17 May 2021 10:07 AM GMT)

பேரளம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 5 மோட்டார்சைக்கிள்கள்- 2 மாட்டுவண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.

நன்னிலம்,

பேரளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசலாற்றில் மாட்டுவண்டிகளில் மணல் அள்ளி கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பேரளம் அருகே உள்ள ஆத்தூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(வயது19) தண்டதோப்பு பகுதியை சேர்ந்த பாலாமணி ஆகியோர் என்பதும், அனுமதியின்றி மணல் அள்ளியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் 2 மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்து தப்பி ஓடிய பாலாமணியை வலைவீசி தேடிவருகின்றனர்.

5 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்

இதேபோல் அரசலாற்றில் மோட்டார்சைக்கிள்களில் 5 பேர் மணல் அள்ளி கொண்டிருந்தனர். அப்போது போலீசாைர கண்டதும் மோட்டார் சைக்கிள்களை அங்கேயே நிறுத்திவிட்டு 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தண்டதோப்பு பகுதியை சேர்ந்த பிரகாஷ், ஸ்டாலின், சரவணன், பேரின்பன், இஞ்சிகுடியை சேர்ந்த மணி ஆகியோர் என்பதும், அனுமதியின்றி மணல் அள்ளியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்து, தப்பி ஓடிய 5 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story