தஞ்சையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


தஞ்சையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 May 2021 1:43 PM GMT (Updated: 21 May 2021 1:43 PM GMT)

தஞ்சையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது.

தஞ்சாவூர்,

தஞ்சை கரந்தையில் உள்ள கீழக்கரை தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகன் திவாகர் (வயது 20). இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் திவாகரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், கலெக்டர் கோவிந்தராவுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சந்திரமோகன் குண்டர் சட்டத்தில் திவாகரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.

Next Story