மூதாட்டி வெயிலுக்கு பலி


மூதாட்டி வெயிலுக்கு பலி
x
தினத்தந்தி 21 May 2021 6:22 PM GMT (Updated: 21 May 2021 6:22 PM GMT)

கோடை வெயிலின் தாக்கத்தால் மூதாட்டி இறந்ததார்

கந்தர்வகோட்டை, மே.22-
குளத்தூர் உடையாளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா. இவரது மனைவி பாப்பா (வயது 64). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார். இந்த நிலையில் நேற்று அவர் கந்தர்வகோட்டை அருகே அரவம் பட்டி கிராமத்தில் உள்ள தைல மரக் காட்டில் பிணமாக கிடந்தார். கோடை வெயிலின் தாக்கத்தால் அவர் இறந்ததாக தெரிகிறது. இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story