மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
அருப்புக்கோட்டையில் மணல் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையில் போலீசார் திருச்சுழி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை போலீசார் நிறுத்த முயன்றபோது லாரி ஓட்டுனர் போலீசாரை கண்டதும் லாரியை நடுவழியில் நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். போலீசார் லாரியை சோதனையிட்டதில் அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story